| 
  
  
    |     | 
  
    | 
       சிறப்பு விதை நேர்த்தி  | 
    
  
    நிலக்கடலையில் உயிருள்ள விதைகளை  பிரித்தெடுத்தல்  | 
      | 
  
  
    | நிலக்கடலை விதையின் எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக அதன் முளைப்பு திறன் வேகமாக சரியும். எனவே நிலக்கடலையில்
      அதிக மகசூல் பெற
        உ யிருள்ள விதைகளை  பிரித்தெடுத்து தரமான விதைகளை விதைப்பது அத்தியாவசியமாகிறது. இந்த நுட்பம் உ யிருள்ள விதைகளை இறந்த விதைகளில்
       இருந்து பிரித்தெடுக்க பயன்படுகிறது. 
 செய்முறை 
      
        
          - நிலக்கடலை பருப்பில் நன்கு முற்றாத உடைந்த  சுருங்கிய மற்றும் நோய் தாக்கிய சிறிய விதைகளை முதலில் பரித்தெடுக்க வேண்டும்.
 
          - ஒரு கிலோ விதைக்கு 1/2 லிட்டர் என்ற  அளவில் 0.5 சத கால்சியம் குளோரைடு உப்புக் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
 
          - ஒரு ஏக்கர் விதைக்கு (50-55 கிலோ விதைப்  பருப்பு) தேவையான 0.5 சத கரைசல் தயார் செய்ய 125 கிராம் கால்சியம் குளோரைடு என்ற இராசயன  உப்பை 25 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்.
 
          - பிறகு ஊறவைத்த விதைகளை இரண்டு ஈர சாக்குகளுக்கிடையே  மெல்லியதாக பரப்பி 16 மணி நேரம் இருட்டில் மூட்டம் வைக்க வேண்டும்.
 
          - இந்த சமயத்தில் உயிருள்ள விதைகளிலிருந்து  சுமார் 5 மி.மீ அளவு முளைக்குருத்து வெளிவந்து விடும்.
 
          - முளைக்குருத்து வெளிவந்த விதைகளை தனியே  பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும்.
 
          - இவ்வாறு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை  முளைவிட்ட விதைகளை 3 முறை பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். கடைசியில் முளைவராத  விதைகள் இறந்த விதைகளாகும்.
 
          - இவ்வாறு தேர்வு செய்த விதைகளை கார்பன்டாசிம்  என்ற பூஞ்சாணக் கொல்லி கொண்டும் பின்னர் ரைசோபியம் கொண்டும் விதை நேர்த்தி செய்து  உடனே விதைக்க வேண்டும்.
 
           
         
பயன்கள்
      
        
          - முளைவிடாத இறந்த விதைகளை வீட்டு உபயோகத்திற்கு  பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக எண்ணெய் எடுக்க பயன்படுத்தலாம்.
 
          - மேலும் வயலில் போதுமான அளவு செடிகளை,  விதைகளை விரயம் செய்யாமல் பெற முடியும்.
 
          - விதைகளை கால்சியம் குளோரைடு கரைசலில்  ஊர வைப்பதால் கால்சியம் குறைபாடால் வரக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
 
          - இதனால் ஏறக்குறைய 10-1 முதல் 15 சதம்  கூடுதலாக விளைச்சலைப் பெறமுடியும்.
 
           
       
              | 
      | 
  
  
      
       
  | 
  
  
    உயிருள்ள விதைகளை  பிரித்தெடுத்தல்  | 
  
  
    | Updated On: Jan, 2016 | 
  
  
   |   | 
  
    
      
      
      © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016. 
        | 
  
     |